Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்செங்கோடு: நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை, சேலம் அன்னபூர்ணா மருத்துவமனை மற்றும் தேவனாங்குறிச்சி பஞ்சாயத்து இணைந்து முழு உடல் பரிசோதனை முகம் தேவனாங்குறிச்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
முகாமில் மருத்துவர்கள் பிரியங்கா, தாரணி, தேசிங்கு ராஜா, ஞானசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார், நம்ம திருச்சங்கோடு அறக்கட்டளை நிறுவனர் சேன்யோ குமார், அறக்கட்டளை செயலாளர் V.P.சதீஷ்குமார், இணை செயலாளர்கள் கலையரசி, கோகுல்ராஜ், தீபக், வெங்கட், அரவிந்த் மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மருத்துவ முகாமில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றனர்.
இதில் 50 க்கும் மேற்பட்டோருக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.